AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிராரோ
கண்ணே கண்ணுறங்கு
விண்ணகம் துறந்து மண்ணகம்
மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு

மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்
அவலம் மறைந்திடும் உந்தன் வரவால்
பிறப்பில் உயர்வு தாழ்வு கருதிடும்
இழிவும் ஒழிந்திடும் உந்தன் அருளால்
மனித நேயம் மண்ணில் மலர்ந்திடும்
நீதி நேர்மை புவியை நிறைத்திடும்
வா தேவா என்னில் வா
எந்தன் இதயம் பிறந்து வா

உடைமை இழந்தோர் உரிமை இழந்தோர்
உவகை கொள்வார் உந்தன் வரவால்
உறவை இழந்த உள்ளம் உடைந்தோர்
அமைதி பெறுவோர் உந்தன் அருளால்
பகைமை நீங்கிடும் உறவு மலந்திடும்
பிரிந்த இதயங்கள் மகிழ்வால் நிறைந்திடும்
வா தேவா என்னில் வா
எந்தன் இதயம் பிறந்து வா.

Leave a Comment Cancel Reply

Exit mobile version