Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics:

அன்பே மனித உருவமாய்
அவதரித்தார், நம்மில் பிறந்தார்
என்றும் இம்மானுவேலராய்
தோன்றினார், நம்மில் வாழ்கின்றார்

அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)

Verse 1:

வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்
அந்த மகிமை இருளை நீக்கியது
நம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவே
அந்த ஒளியை நமக்காய் தந்தாரே
அவர் அன்பை ருசித்த நாமும்
அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம்

Verse 2

நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவே
அவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரே
மண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்
மனிதனாய் நிற்க செய்தாரே
அவர் கிருபை பெற்ற நாமும்
அவர் ராஜ்யத்தை கட்டிட உதவி செய்வோம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version