அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளை
விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;
அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே

பல்லவி

அரிக்கட்டோடே அரிக்கட்டோடே
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே

2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்
குளிர் பனி கூதல் பயப்படாமல்
வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே

3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்
தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;
கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்
சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே

Leave a Comment Cancel Reply

Exit mobile version