அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing 

1. அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே
பல்லவி
அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய் பெய்யட்டுமே
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் – அருள்
3. அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு! வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும்
க்ரியை செய்தருளுமேன். – அருள்
4. அருள் ஏராளமாயப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே. – அருள்
Arul Yearaalamaai Peiyum
Uruthi Vakkithuvae
Aaruthal Thearuthal Seiyum
Sabaiyai Uyirpikkumae
Arul Yearaalam
Arul Avasiyamae
Arpamaai Sorpamaai alla
Thiralaai Peiyattumae
Arul Yearaalamaai Peiyum
Mega Mantharaa Mundaam
kaadaana Nilathilaeyum
Sezhippum Poorippumaam
Arul Yearaalamaai Peiyum
yesu Vantharulumaen
Ingulla Kottathilaeyum
Kiriyai Seitharulumaen
Arul Yearaalamaai Peiyum
Pozhium Etchanamae
Arulin Maariyai Thaarum
Jeeva Thayapararae
அருள் ஏராளமாய் பெய்யும்
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
அன்பின் வாக்குத் தத்தமே
ஆறுதல் தேறுதல் ஈவார்
ஆண்டவர் மேலிருந்து
அருள் ஏராளம்
அருள் அவசியமே;
க்ருபைத் துளிகள் போதாது
மாரியாய்த் தந்தருளும்!
2. அருள் ஏராளமாய் பெய்யும்
மீண்டும் உயிர்ப்பித்திடும்
மேடு பள்ளங்களின் மேலும்
கேள் மாமழையின் சத்தம்! – அருள்
3. அருள் ஏராளமாய் பெய்யும்
எம்மேலனுப்பும் கர்த்தா!
உம் வாக்கை எண்ணி நீர் எம்மை
இப்போ உயிர்ப்பித்திடும் – அருள்
4. அருள் ஏராளமாய் பெய்யும்
இன்றே பெய்திட்டால் நலம்;
பாவ அறிக்கை செய்கிறோம்
இயேசுவின் நாமத்திலே – அருள்

Leave a Comment Cancel Reply

Exit mobile version