அளவில்லா ஆழிபோல -Azhavilla aazhipola

அளவில்லா ஆழிபோல
1. அளவில்லா ஆழிபோல
உலகெல்லாம் பொங்குதாம்
அது இயேசுவின் நேசமாம்!
அங்கலாய்க்கும் பாவியை
அருளதாம்
ஆக்குமாம் நல்லோனாக
2. ஆகாயத்தில் பிரகாசிக்கும்
அளவில்லா ஜோதிபோல்
இயேசு நாதர் வாக்குத்தத்தம்
இலங்கி ஜொலிக்குது;
எப்பாவிக்கும்
நம்பினால் மீட்பு உண்டு
3. சுத்தாகாயம் விலையின்றி
நித்தம் நாம் முகரும்போல்
அத்தனேசு அரும் பாடால்
அளித்த இரட்சண்யத்தை
அடைவோமே
அசுத்தம் அகலுமே!
4. பாவக் கறையிலிருந்து
தேவ கிருபை மீட்டிடும்
சாகுமட்டும் அவர் பெலன்
சுத்தமாயென்றும் காக்கும்;
போற்றிடுவோம்
புண்ய நாதன் இயேசுவை

Leave a Comment Cancel Reply

Exit mobile version