BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே

பெத்லகேம் என்னும் ஊரினிலே
தாழ்மையின் ரூபமாய் பிறந்தாரே
பாவியாம் உன்னையும் இரட்சிக்க
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே-2

மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க-2
விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது-2

அல்லேலூயா துதி பாடிடுவோம்
மீட்பரையே வாழ்த்திடுவோம்
அல்லேலூயா துதி பாடிடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்

பாதை எல்லாம் இருளானதோ
வழிகள் எல்லாம் தடைபட்டதோ
இயேசுவே வழியும் சத்தியமும்
ஜீவனும் பெலனும் ஆனவரே-2-அல்லேலூயா

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்
அவர் நாமம் அதிசயமே-2
ஆலோசனைக்கர்த்தா இவர்
வல்லமையுள்ள தேவன் அவர்-2-அல்லேலூயா

Leave a Comment Cancel Reply

Exit mobile version