Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்

மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்
இயேசு பிறந்தாரே
கொட்டும் பனியிலே இராஜாவாக
இயேசு பிறந்தாரே-2

நம் பாவங்கள் போக்க
சாபங்கள் நீக்க
பூலோகம் வந்தாரே-4

விண்மீன் காட்டிய வழி இது
இருளை போக்கிய ஒளி இது
நம் இயேசு இராஜாவின் வழி-2

சின்ன குழந்தை சிரிப்பினில்
இதயங்கள் மகிழுதே
செல்ல குழந்தையின் வருகையால்
இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில்

தூதர் உம்மையே துதித்திட
இடையர் உம்மையே வணங்கிட
சாஸ்திரியர் உம்மை தொழுதிட

இருள் போக்க பிறந்தாரே
கனிவாய் பரலோகம் திறந்தாரே
மாந்தர்கள் மத்தியில் நமக்காக
இயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில்

Leave a Comment Cancel Reply

Exit mobile version