Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் song lyrics

வானம் விட்டு பூமி வந்தார்
விண்னை விட்டு மண்ணில் வந்தார்
எங்கள் குரு நாதர் இயேசு
பெத்தலையில் முன்னணையில்
கன்னி மரி மடியினில்
வந்துதித்தார் எங்கள் இயேசு

கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட
எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார்

விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு
ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார்

உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம்
மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார்

KARAOKE

Leave a Comment Cancel Reply

Exit mobile version