வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai

பாடல் 10
வானிலே மின்னும் வண்ண தாரகை
துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே
காற்றிலே மெல்ல வந்த கானமே
இனியதாளமே மயக்கும் ராகமே
1,வானம் விட்டுவையம் வந்த
வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4)
மந்தை காத்த மேய்ப்பர் முன்னே
வானதூதர் சொல்லவந்த செய்தி
விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2)
2.ஜீவன் தந்து வாழ வைத்த
உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4)
சேற்றினின்று தூக்கி வந்த
மேய்ப்பன் உந்தன் தோளில் சேர ஆசை(4)
என்னை தேடி வந்ததாலே
என்னை மீட்டுக்கொண்டதாலே
நாளும் உந்தன் பின் நடக்க ஆசை (3) (2)

Leave a Comment Cancel Reply

Exit mobile version