அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar neer varuga

அக்கினிமயமானவரே நீர் வருக
அச்சாரமானவரே நீர் வருக
ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக
காற்றாய் வீசுபவரே நீர் வருக
எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக
முத்திரை அடையாளமானவரே நீர் வருக
புறாவைப் போல் இறங்குபவரே நீர் வருக
ஆவியானவரே நீர் வருக
எங்கள் மீது இறங்கி அருள் தருக
அல்லேலூயா அல்லேலூயா – 6
1. நீர் வரும்போது சுத்திகரிப்பு
எனக்கு உண்டாகும்
நீர் வரும்பொழுது சமாதானம்
எனக்கு உண்டாகும்
2. நீர் வரும்போது பரிசுத்தம்
எனக்கு உண்டாகும்
நீர் வரும்பொழுது பாதுகாப்பு
எனக்கு உண்டாகும்

Leave a Comment Cancel Reply

Exit mobile version