அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் – Anbin Deivam Yesu Aaruthal Lyrics

அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன்
1.பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல
இயேசு வாழ்கின்றார் என்னில்
2.இயேசு பேசும்போது என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும்போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன்
வெல்வேன் அலகையை தினம்
3.கண்ணீர் சிந்தும்போது மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருக்கும்போது அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் எனக்கு

Leave a Comment