அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே(2)

முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு
முற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததே
உம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே(2)
உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே(2) . அப்பா உந்தன்

ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கிய
உம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனே
ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில்(2)
நன்மையும் கிருபையும் என்னைதொடருமே . அப்பா உந்தன்

மோசேயோடு உடனிருந்த தேவனல்லவா
உம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவா
மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்
முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே. அப்பா உந்தன்

Leave a Comment Cancel Reply

Exit mobile version