இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham yesuvai santhika

பல்லவி
இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க!
அனுபல்லவி
வருவார் நினையாமலே – திண்ணம்
வான்முகில் மீது சீக்கிரம்!
சரணங்கள்
1. மண்ணுறும் சகல மாந்தரங் காணவே
மன்னனேசுதான் விண்ணரோடுமே
மகிமையாகவே தோன்றுவார் – இரு
2. ஊதும் எக்காளம் ஓசையாய்த் தொனிக்கையில்
பூதங்கள் பஸ்பமாகி வானமும்
பூமியும் வெந்தழிந்து போம் – இரு
3. கர்வங்கொண்டதோர் பாவிகள் யாவரும்
கர்த்தனார் வருங்காலத்தினவர்
கவலையுற்றதால் அலறுவார் – இரு
4. புத்தியுள்ள ஐங்கன்னிகள் போல் தேவ
பத்தனாய்ப் பரிசுத்தனாய் முழுத்
தத்தஞ் செய்துமே நித்தமும் – இரு
5. ஜீவ ஓட்டத்தில் திருடனைப் போலவே
சாவுதான் வரும் தப்பொணாது நீர்
தாவி மீட்பரைச் சார்ந்ததுமே – இரு
6. தேவனார் தீர்ப்புச் செய்யு மவ்வேளையில்
பாவியே! வலப்பக்கம் நின்றிட
பாவ மன்னிப்புப் பெற்றிங்கே – இரு

Leave a Comment Cancel Reply

Exit mobile version