இஸ்ரவேலே பயப்படாதே -Isravele Bhayapadathe

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே – மகனே ( மகளே )
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்
2. தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே ( மகளே )
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே – மகனே ( மகளே )
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய்

Leave a Comment Cancel Reply

Exit mobile version