உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil ummodu

Lyrics:
உன்னதங்களில் உம்மோடு கூட என்னை
அமரசெய்த இயேசுவே என் இயேசுவே
அழியாவாழ்வை என்னக்காக சம்பாதித்து
வைத்த என் இயேசுவே என் நேசரே

தூக்கி எடுத்தீரே
என்னை புது சிருஷ்டி ஆக்கினீரே
ஆழ படைத்தவரே
கையில் அதிகாரம் தந்தவரே

திருரத்தத்தினாலே மீட்டு தேவனோடு
ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவே
வெற்றி வாழ்வை இவுலகில் வாழ
அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே

தெரிந்து கொண்டீரே
என்னை நீதிமான் ஆக்கினீரே
வாழ வைப்பவரே
என்னை வழுவாமல் காப்பவரே

நானே வழி நானே சத்யம் நானே ஜீவன்
உயிர்த்தெழுதல் என்றவரே என் இயேசுவே
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மையேநான்
நம்புவேன் என் இயேசுவே என் நேசரே

கிரையத்துக்கு கொள்ளப்பட்டேனே
நீர் தங்கும் ஆலயம் நானே
உயிருள்ள தெய்வமே
என் உயிரோடு கலந்தவரே

உன்னதங்களில் உம்மோடே கூட என்னை
அமரசெய்த இயேசுவே என் இயேசுவே

Additional stanza –

கிருபையையும் நீதியையும் அளவில்லாமல்
என்னக்கு தந்த இயேசுவே என் இயேசுவே
ஜீவன் சுகம் பெலன் ஐஸ்வர்யம் உன்னக்கு
சொந்தம் என்ற தந்த இயேசுவே என் நேசரே

மீட்டு எடுத்தீரே
என்னை உயர்த்தி வைத்தீரே
என்ன நான் செய்திடுவேன்
இவ்வளவாய் அன்பு கூர்ந்திரே

Leave a Comment Cancel Reply

Exit mobile version