எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan

எப்போதும் உம்மோடுதான்
உம் வலக்கரம் என்னோடுதான்

என் வாஞ்சையெல்லாம் நீர்தானே
என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே
ஆராதனை ஆராதனை (2)
ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும்

1. பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்கு யாருண்டு
பூலோகத்தில் உம்மைத்தவிர
வேறே விருப்பமில்லை – எனக்கு

2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
பெலனே நீர்தானையா
உம் சித்தம் போல நடத்துகிறீர்
மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம்

3. காருண்யத்தின் கயிறுகளால்
கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்
பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம்
பெரியவனாக்கி விட்டீர் – என்னைப்

4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கி
நிமிர்ந்து நடக்கச் செய்தீர் – என்
கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து
கைவிடாமல் காப்பாற்றினார் – இதுவரை

5. உம்மைத்தானே அடைக்கலமாய்
அண்டிக் கொண்டேன் அனுதினமும்
புகலிடமே என் மறைவிடமே
உம் புகழ்தனை சொல்லி வருவேன்

Leave a Comment Cancel Reply

Exit mobile version