எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்
நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே

உமக்கே ஆராதனை-3
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை-3
நீர் எந்தன் எல்ரோயீ

1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே
என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2
(தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதே
ஆனால் உம் அன்போ மாறாததே-2

உமக்கே ஆராதனை-3
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை-3
நீர் எந்தன் எல்ரோயீ

2.பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக
பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக-2
நாசியிலே சுவாசமுள்ள மனிதர் பார்வை மாறியதே
ஆனால் நீர் மட்டும் என்னை காண்கின்றீர்-2

உமக்கே ஆராதனை-3
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை-3
நீர் எந்தன் எல்ரோயீ

நீரே என்னை காண்கிற தேவன்
நீரே என்னில் வாழ்கிற தேவன்
நீரே என்னை உயர்த்திடும் தேவன்
எந்தன் எல்ரோயீ…..
ஆராதனை ஆராதனை ஆராதனை
எந்தன் எல்ரோயீ…..

https://www.youtube.com/watch?v=Po6A4ghaWWY

Leave a Comment Cancel Reply

Exit mobile version