கர்த்தருக்குக் காத்திருந்து

கர்த்தருக்குக் காத்திருந்து
கழுகுபோல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8)
1. தாகமுள்ளன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தின் மேல்
தண்ணீரை ஊற்றிடுவார் – புது பெலன்
2. சர்ப்பங்களையும் எடுப்பாய்
தேள்களையும் மிதிப்பாய்
சத்துருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய் – புது பெலன்
3. சாத்தானின் கோட்டைகளை
சத்தியத்தால் தகர்ப்பாய்
சிலுவையை சுமந்திடுவாய்
ஜெயக்கொடி ஏற்றிடுவாய் – புது பெலன்
4. கர்த்தரில் பலனடையும்
பாக்கியம் பெற்றிடுவோம்
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனுக்கு வருவாய் – புது பெலன்

Leave a Comment Cancel Reply

Exit mobile version