கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul KALIKOORNTHU

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
ஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2

1. பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே

2. பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே

3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே

4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

5. கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு – என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

Leave a Comment Cancel Reply

Exit mobile version