ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் – Jeevanulla Devanai Seavippar lyrics

1. ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ?
ஜீவனை அவர்க்காயளிக்க இங்கு யாருண்டோ?
ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
ஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே – நம்மிலே
2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால்
திருச்சபையின் வளர்ச்சி ஓங்கச் செய்த தெவ்வாறு
பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே
3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு
ராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே
4. பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பணும்
உலகத்தையும் மேன்மையையும் உதறித் தள்ளணும்
சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே
5. வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
இரத்தத்தில் தம் அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்
ஜீவனை வெறுத்துச் சிலுவையை எடுத்து
வெற்றிக்கீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே

Leave a Comment Cancel Reply

Exit mobile version