தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong

Song Lyrics

தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் – 2
என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே (தைரியம் தந்திரே) – 2

நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2

1 தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே
கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே
கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2
கன்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே – 2

நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2 – தனிமை

2 பாவத்தை தேடியே நான் தினம் தினம் அலைந்தேனே
பரிசுத்த தேவனெ நான் உம்மை மறந்தேனே
பாரினில் எங்கும் மரண ஒலி கேட்டதே – இந்த – 2
தயவாய் என்னை மட்டும் (உந்தன்) கிருபை காத்ததே -2

அன்பு போதுமே இந்த (உந்தன்) அன்பு போதுமே – 2 – தனிமை

3 வாழ்வை உமக்கே நான் இன்று அர்பணிக்கின்றேனே
சீர்படுத்தி என்னை உமக்கே பயன்படுத்துமே
உலகினில் எங்கும் நல்ல (உந்தன்) செய்தி கூறுவேன் – 2
ஓட்டத்தை முடித்து கொண்டு (நான்) சீயோன் சேருவேன் – 2

இயேசு வருகிறார் எஙகள் இயேசு வருகிறார்
ஆயத்தமாகிடுவோம் (உடன் ) செல்ல ஆயத்தமாகிடுவோம – 2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 4

நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2

Leave a Comment Cancel Reply

Exit mobile version