தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

1. கவலையில்லையே கலக்கமில்லையே
கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர் தினம்

2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே -என்

3. துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா -என்

4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த

5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான்

6. அதிசயமே அதிசயமே
ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
அடைக்கலப் பட்டணமே

Leave a Comment Cancel Reply

Exit mobile version