துதிசெய் மனமே நிதம் துதிசெய் – Thuthisei maname

பல்லவி

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்

1. முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே – துதி

2. ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
எக பரன் உன் காவலனாய்யிருந்தாரே – துதி

3. சோதனை பலவாய் மேகம் போல் உன்னை சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை – துதி

4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே – துதி

5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே – துதி

Leave a Comment Cancel Reply

Exit mobile version