நன்றி நன்றி என்று நான் பாடுவேன் – Nandri Nandri Endru Naan Paaduvaen song lyrics

நன்றி நன்றி என்று நான் பாடுவேன்
நன்றி, நன்றி என்று நான் கூறுவேன் – 2
கர்த்தர் செய்த நன்மைகளை நான்
நித்தமும் நினைத்திடுவேன்
என் தேவன் செய்த நன்மைகளை நான்
நித்தமும் துதித்திடுவேன்
செங்கடல், யோர்தான் நதி என்னை
சூழ்ந்து நெருக்கும் போது
கர்த்தர் கரம் அங்கேயுண்டு
வெட்டாந்தரை ஆகுமே – (2)
அவர் பார்வோன் சேனை முறியடிப்பார்
என் பாதையெல்லாம் வெளிச்சமாகும்
எரிகோ கோட்டை முன்னே நின்றாலும்
அது துதியினால் இடிந்து விழும்.
நன்றி, நன்றி என்று நான் பாடுவேன்
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கழுகு போல் பெலன் கொண்டு உயரே எழும்பிடுவோம் – (2)
அவர் காலைதோரும் கண்ணோக்குவார்
என்னை நாள்தோறும் நடத்திடுவார்
என்னை உள்ளங்கையில்
வரைந்ததினால் நான்
அசைக்கப்படுவதில்லை.
நன்றி, நன்றி என்று நான் பாடுவேன்

Leave a Comment Cancel Reply

Exit mobile version