நம் கர்த்தர் என்றும் நல்லவர்

நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
1. நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடததுகின்றார்
கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார் – நம் கர்த்தர்
2. நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
நீ சத்தமிடும்போது இதோ
இருக்கிறேன் என்பாரே – நம் கர்த்தர்
3. வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
அதின் பாதை முழவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார் – நம் கர்த்தர்

Leave a Comment Cancel Reply

Exit mobile version