பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics

பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனே
கருக்குள்ள பாதையிலே நடந்து போகிறேன்-2

1.சுயத்தின் பெலத்திலே நான் வாழ்ந்து வந்தேன்
சுகம் என்று இதுவரை நான் கண்டது இல்லையையா-2
ஏசு தெய்வமே என்னை பாரும் ஐயா
என் சோகமதை தீர்க்க வருமையா-2 -பாதா

2.மனிதனை நம்பி நடுத்தெருவில் நின்று விட்டேன்
மதியின் பெலத்தினால் என் நிலையை பாருமையா-2
என்னை தூக்கி விட யாரும் இல்லையையா
என் ஆறுதலாய் வார்த்தை இல்லையையா-2 -பாதா

3.நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிட்டேன்
கடல் மேல் நடந்து வந்து தூக்கி விடுமையா-2
நீர் தூக்கிவிட்டால் கரை வந்திடுவேன்
இல்லையென்றால் பாதாளம் சென்றிடுவேன்-2 -பாதா

Leave a Comment Cancel Reply

Exit mobile version