யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா (4)

அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)
ஆதரித்தே அரவணைப்பாய் (2)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா (2)
குணமதிலே மாறாட்டம் (2)
குவலயந்தான் இணைவதெப்போ (2)

வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு (2)
உனது மனம் இரங்காதோ (2)

Leave a Comment Cancel Reply

Exit mobile version