வானிலோர் திருநாள் உண்டே

வானிலோர் திருநாள் உண்டே
வானிலோர் திருநாள்
1. வான் முடி மன்னன் தான் வருவாரே அன்றும் அன்றும்
வருவாரே எனக் காறுதலவரே
விரைவோடு செல்லுவோம் ஓரிமைப் பொழுதில்
அரசன் இயேசுவுடனே ஆ, ஆ! – வானி
2. வானம் முழங்குமே
வருவாரே வெகு சேனைகளுடனே
ஆர்ப்பரித்திடுவோம், ஆனந்தமுறுவோம்
ஆகாய மீதிலே ஆ, ஆ! – வானி
3. தூதர்கள் தொனியுடன் நாதங்கள் கேட்குமே அன்றும் அன்றும்
துதிப்போமே போற்றியே கீதங்கள் பாடுவோம்
தூயனைப் போற்றியே கீதங்கள் பாடுவோம்
நேயனைச் சேருவோம் ஆ, ஆ! – வானி
4. முள்முடி நமக்காய் அணிந்தவர் திருமுகம் காண்போம்
காண்போம் நம் நாதரை விரைவினில் காண்போம்
நொடிதனில் செல்லுவோம், அவரடி பணிவோம்
அவரையே சேவிப்போம் ஆ, ஆ! – வானி
5. ஆனந்தம் முழங்கும் ஆனந்த புரியில் எங்கும் எங்கும்
துலங்கும் அவர் ஜோதியே அங்கும்
அவர் பெயர் ஓங்குமே அவர் துதி தங்குமே
அன்பரின் நாவிலே ஆ, ஆ! – வானி

Leave a Comment Cancel Reply

Exit mobile version