விண்ணரசை விட்ட எம்மரசே – Vinnarasai vitta Emmarasae

விண்ணரசை விட்ட எம்மரசே
வித்தகரே எம் இரட்சகரே
உம்மரசை ஏகுவேன்
உம்மன்பையே நாடுவேன்
என்றென்றுமே காருமே
துதிகளிலே வாசம் செய்பவரே
தூதர்களும் போற்றுகின்ற தூயவரே
இவ்வுலகை நீர் படைத்தீர்
உதிரத்தால் மன்னிப்பளித்தீர்
நீரே காண்கின்ற தேவன்
நாளும் காக்கின்ற ஆயன்
மறைவிடமே எம் புகலிடமே
உந்தனையே காண்பதிலே பரவசமே
மண்ணால் மனிதனை படைத்தார்
ஜீவனை அவனுக்களித்தீர்
கண்ணின் மணி போல் காக்கும்
வல்ல தேவன் நீரே

Leave a Comment Cancel Reply

Exit mobile version