ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை-Aalayam Selluvom Aandavarai

ஆலயம் செல்லுவோம்
ஆண்டவரைத் தொழுவோம்
ராஜாதி ராஜா அவரே – இயேசு
கர்த்தாதி கர்த்தர் அவரே

பல்லவி

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா துதி அல்லேலூயா

சரணங்கள்

ஆலயம் ஒழுங்காய் செல்லுவோம்
ஆண்டவர் இயேசுவைத் தொழுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்தே பாடுவோம்
ஆனந்த துதியோடு போற்றுவோம் – அல்லேலூயா

பாவங்களை மன்னிப்பவர் அவரே
பொல்லா சாபங்கள் நீக்குபவர் அவரே
துன்பங்களைப் போக்குபவர் அவரே
விடுதலைத் தருபவர் அவரே – அல்லேலூயா

உற்சாகமாய் காணிக்கைப் படைத்து
உள்ளத்தையே அவருக்குக் கொடுத்து
உண்மையாய் ஆராதனைச் செய்து
உன்னத ஆசீர்வாதம் பெறுவோம் – அல்லேலூயா

Leave a Comment Cancel Reply

Exit mobile version