Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம்

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரம் (3) தினம்
2. எதிர் காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே (3) தினம்
3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே (3) என்னை விட்டு
4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே (3)
5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே (3)
6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே (3)

Leave a Comment Cancel Reply

Exit mobile version