Anbae Ennaaruyirae – அன்பே என்னாருயிரே

பல்லவி
அன்பே! என்னாருயிரே
இன்பே! எனதரணே!
அனுபல்லவி
துன்பமுறு முலகில் தூயா! நீயே என் கோனே!
சரணங்கள்
1. என்றும் உம்மை நேசிப்பேன்
என் முழு பலத்தாலே,
உந்தன் செயல்களையே
நன்றாகத் தியானிப்பேனே – அன்பே
2. எத்தனை நாளாக நான்
உத்தம வேந்தே! உமை
பக்தியாய்ப் பணியாமல்
கர்த்தா! உமை வஞ்சித்தேன் – அன்பே
3. தூய நல் மனதாலும்
மாய மில்லாதன்பாலும்;
நேய னுமை சேவிக்க
தூய ஆவி தந்தாளும்! – அன்பே
4. அனாதியானவனே!
அற்பன் மேல் அன்புற்றோனே!
தினமு மும்மைப் பின் பற்ற
தேவே எனையாக்குமேன்! – அன்பே
5. முச் சத்துருக்கள் என்னை
அச்சமுறத் தாக்கையில்
அட்சயன் இயேசு நாதா!
பட்சமாய்க் காருமென்னை – அன்பே
6. இந்த நீதிப் பாதையில்
உந்தனடி பின் சென்று
சந்ததமுந் திடனாய்
எந்தாய் நடக்கச் செய்வாய்! – அன்பே
7. பரன் உம்மைத் தேடாமலே
நரகத்திற் கேகுவோரை
விரைவில் நல்வழி சேர்க்க
கரையு மென்னுள்ளம் அன்பால்! – அன்பே

Leave a Comment Cancel Reply

Exit mobile version