Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல

பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும்
என் தேவனால் எல்லாம் கூடும்- 2

ஆகையால் துதித்திடு
ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு
பயத்தை விடுத்திடு-2
– பெலத்தினால்

1.அவனிடம் இருப்பதெல்லாம்
மனிதனின் புயம் அல்லவா
நம்மிடத்தில் இருப்பதுவோ
நம் தேவனின் பெலனல்லவா-2
– ஆகையால்

2.கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
அதற்க்கொரு தடையில்லையே
மனிதனால் முடியாதது
நம் தேவனால் முடிந்திடுமே-2
– ஆகையால்

3.இன்று கண்ட எகிப்தியனை
என்றும் இனி காண்பதில்லை
கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
நீங்கள் ஒன்றும் செய்வதில்லை-2
– ஆகையால்

4.அநேகரை கொண்டாகிலும்
கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
இரட்சிப்பது தடையுமல்ல
நம் தேவனுக்கு தடையுமில்லை-2
– ஆகையால்

Leave a Comment Cancel Reply

Exit mobile version