Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை

1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்
தேவர் குலமாய் வாரதாரையா? இவர்
தேவ னுரைப்படி
பவ வினைப்படி
ஏவை மனப்படி
ஆவல் மிகப்படி
வணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர்
2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வென
ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்
உத்தம நேசனாம்
சத்திய போசனாம்
பத்தரின் வாசனாம்
நித்திய ஈசனாம்
உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர்
3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்
பாவலருடன் வாரதாரையா? இவர்
பசியற்றிருந்தவர்
பொசிப்பற்றிருந்தவர்
வசைபெற்றிருந்தவர்
அசைவற்றிருந்தவர்
பாவ விமோசன ராசன் தானையா.- இவர்
4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்
சிங்காரமாய் வருவதாரையா? இவர்
சீருற்றதிபனாம்
பேர் பெருற்றிறைவனாம்
ாருற்றதிபனாம்
வேருற்றெழுந்தனாம்
சீவ வழி சொல்வரிவர் தானையா.- இவர்
5.எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே
குருத்தோலை வருவதாரையா? இவர்
அரிவை பவமற
பெருமை நிதந்தர
கிருபை துரந்தர
அருமை நிரந்தர
ஏசு கிறிஸ்திறைவர் தானையா.- இவர்
6.வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப
வஸ்திரமீதில் வீச வாரதாரையா? இவர்
வல்லவராங் குரு
சொல் தவறாக் குரு
நல்லவராங் குரு
துல்லிய சற் குரு
வரமிகுந்த சற்குரு தானையா.- இவர்

Leave a Comment Cancel Reply

Exit mobile version