En Aiya thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான்

என் ஐயா, தினம் உனை நம்பி நான்
இருப்பதறியாயோ? – மன
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ?
அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா, கிறிஸ்த்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது?
குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம்
கூசி நாணுதே – என்தன்
கோதும்(குற்றம்) நான் செய்த தீதும் மனதில்
கூடத் தோணுதே
சுற்றும் உலகச் சத்துருப்பகை
சூழக் காணுதே
கருதி மொழி உறிதி தனைக்
கருதி வந்தேன் பொறுதி அருள்
உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே – என
துற்ற ஜனமும் சுற்றத்தோர்களும்
உரிமை இல்லையே
பின் எவரிடம் போவேன் சொல்? அது
பெரிய தொல்லையே
பேசும் விசுவாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்!
அத்தனே உந்றன் ரத்தத்தால் எனை
ஆற்றித் தேற்றையா – தேவ
ஆவியாகிய ஈவெனும் உன
தருளை ஊற்றையா
நித்தனே என்றன் குற்றத்தையெல்லாம்
நீக்கி ஆற்றையா
நேசா பவ நாசா மறை
வாசா ஏசு ராசா அருள்!

Leave a Comment Cancel Reply

Exit mobile version