En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன்

1. என் பரம பிதா அதிகாஸ்திபன்
பூலோக வஸ்துக்கள் அவர் சொந்தமாம்
வெள்ளி, பொன், முத்துக்கள் இரத்தினக் கற்களும்
சொல்லொண்ணா செல்வங்கள் எல்லாம் எந்தன் பங்கே!
பல்லவி
நானோர் இராஜ புத்ரன் -2
நேச இயேசுவுடன்
நானோர் இராஜ புத்ரன்
2. தேவ சுதன் இயேசு மானிட மீட்பர்
பரதேசியாய்த் திரிந்து மரித்தார்;
இப்போ மோட்சத்தில் பொற் கிரீடாதிபர்
எனக்கும் சாவின் பின் மோட்சம் தந்திடுவார் – நானோர்
3. நான் துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேன் சின்னாள்
பாவத்தில் பிறந்து, பாவி அலைந்தேன்
தேவ மக்களில் இப்போ நான் ஒராள்
பரலோகத்தின் பங்கையும் அடைந்தேன்! – நானோர்
4. வனமோ, குடிலோ? எல்லாம் ஒன்றுதான்,
மேலே எனக்கோர் மாளிகை ஆயத்தம்!
இங்கே பரதேசி! என்றும் பாடுவன்!
அங்கே சத்தியன் நானோர் இராஜ புத்ரன் – நானோர்

Leave a Comment Cancel Reply

Exit mobile version