Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம்

பல்லவி

என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !
இயம்பலாகாதே ,
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே.

சரணங்கள்

1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம் ;
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்.

2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே ;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே.

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,
அருளினதாலே ,
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே.

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே ,
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.

Leave a Comment Cancel Reply

Exit mobile version