Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா

என்னை எழுப்பும் நாதா உம் பணிக்காகவே
பெலப்படுத்தும் தேவா உம் சித்தம் செய்யவே

கிருபை, வல்லமை, நீங்க இல்லாம
என்னால் ஒன்றும் முடியாதய்யா

சோர்ந்து போகிறேன் மனம் உடைந்து போகிறேன்
அர்ப்பணிப்பை சில நேரம் மறந்து போகிறேன்

கிருபை எனக்கு வேண்டும்
வல்லமை எனக்கு வேண்டும்

நீங்க எனக்கு வேண்டும்
என் வாழ்வை மாற்றவே

நீங்க எனக்கு வேண்டும்
நான் உமக்காய் வாழவே

எழும்பப்பார்க்கிறேன் மீண்டும் விழுந்து விடுகிறேன்
தரிசனங்கள் மங்கிப்போன நிலையில் வாழ்கிறேன்

கிருபை எனக்கு வேண்டும்
வல்லமை எனக்கு வேண்டும்

நீங்க எனக்கு வேண்டும்
என் வாழ்வை மாற்றவே

நீங்க எனக்கு வேண்டும்
நான் உமக்காய் வாழவே

மங்கி எரிந்த திரியை அணைய விடவில்லை
நெரிந்த நாணல் என்னை முறிய விடவில்லை

கிருபை எனக்கு தந்தீர்
வல்லமை எனக்கு தந்தீர்

நீங்க எந்தன் வாழ்வில்
தீபமாக வந்தீர்

Leave a Comment Cancel Reply

Exit mobile version