எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithiyil

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கிறேன்

ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.
அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது

1.தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது

இரட்சகரே உம் வருகையில்
நிச்சயமாய் உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ

2.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி-இரட்சகரே

3.காலைதோறும் உம் பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

Leave a Comment Cancel Reply

Exit mobile version