Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்ட பாடு ஏசையாவே!
கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?
கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா
2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌
பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!
பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌
அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா
3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌
எள்ளளவும் பேசாத ஏசையாவே!
கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! – ஐயா
4.கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர் தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே ஏசிட ஏசையாவே!
சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்த‌
சாடிக் கன்னத்தறைய ஏசையாவே! – ஐயா
5.பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய
புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே
அண்ணலே, அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும் ஏசையாவே

Leave a Comment Cancel Reply

Exit mobile version