Jeyam kodukkum devanukku – ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்
நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன்
அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார்
நம்பிக்கை தேவனே
நன்மைகள் அளிப்பார்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார்
உண்மை தேவனே
உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பார்
உறங்குவதில்லையே

Leave a Comment Cancel Reply

Exit mobile version