Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

காலையும் மாலையும்
எவ்வேளையும் இயேசுவே
துதிகளால் உம்மையே போற்றுவேன் (2)

என் நாவினால் உம்மை புகழுவேன்
என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)
என் தாழ்விலும் உம்மை நம்புவேன்
என்றென்றும் நான் நம்புவேன் (2)

உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம்
நான் நம்பும் அரணான மறைவிடம் (2)
உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்
சுகமாய் தங்குவேன் (2)

Leave a Comment Cancel Reply

Exit mobile version