kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே

கண் விழித்து எழுந்து வா மானிடனே
கருணை நாதன் இயேசுவிடம்
சரணங்கள்
1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்து
நீச உலகத்தின் நேயம் மறந்து
துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து
தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து – கண்
2. மனது போல் நடக்கத் துணியாதே
மாய உலகின் வாழ்வை விரும்பாதே
உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே
உல்லாச நடக்கை பொல்லாததே – கண்
3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்
இளைய மகனைப் போல் வரவேண்டும்
பரம தகப்பன் பாதம் விழவேண்டும்
பாவமன்னிப்பை நீ பெற வேண்டும் – கண்
4. பேரன்புறும் பரம தந்தையவர்
பிள்ளை உன்னைச் சதாவும் மறவாதவர்
தூரம் பிரிந்திருக்க மனமற்றவர்
சொந்த வீட்டில் வைத்து சூட்சிப்பவர்! – கண்
5. அசுத்தமறக் கழுவி அலங்கரிப்பார்
ஆடையாக நீதியுடை தரிப்பார்;
பசிக்குப் பருக ஞானப்பால் தருவார்
பரலோக இன்பப் பதவி சேர்ப்பார் – கண்

Leave a Comment Cancel Reply

Exit mobile version