Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில்

1 மா மகிழ்வாம் இந்நாளில்
செல்வோம் முன்னணைக்கே;
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில்
விண் லோகம் துறந்தீர்;
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
3 மெய் அன்பர் நண்பர் நீரே,
நீரே எம் வாஞ்சையும்;
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்.
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும.

Leave a Comment Cancel Reply

Exit mobile version