Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

பல்லவி
மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்
மன்னன் கிறிஸ்தேசு
அனுபல்லவி
மரித்த மூன்றாம் தினத்திலே – முன்
மொழிந்தபடி எழுந்து
சரணங்கள்
1. மூர்க்கமாய் சமாதி காத்ததை
மூடர் முத்ரை சூட;
தீர்க்கமா யோர் தூதனைக் கல்
திறக்க மறை சிறக்க – மரணத்தின்
2. நாரியர் அதி காலைக் கல்லறை
நாட வந்து தேட
வீரியமாய் வேதாளத்தை
வென்று ஜெயங்கொண்டு – மரணத்தின்
3. சீமானோடு யோவானும் ஓடியே
சேர்ந்து உள்ளே புகுந்து
சீலை தவிர சடத்தை காணா
திரும்ப மரி புலம்ப – மரணத்தின்
4. எக்காளம் கடை தொனிக்கவே உல
கெல்லோரும் உடன் உயிர்க்கவே
எக்காலத்திலும் ஏற்ற சாட்சியாய்
இருக்க ஜீவன் அளிக்க – மரணத்தின்

Leave a Comment Cancel Reply

Exit mobile version