Marunthu Kandenae – மருந்து கண்டேனே

பல்லவி
மருந்து கண்டேனே – நானொரு
மருந்து கண்டேனே
சரணங்கள்
1. வருத்தும் பிணிகளை வாட்டும் மருந்து
வளர் பெத்லகேமில் வந்த மருந்து
திருச் செயல்களைச் செய்த மருந்து,
தீன தயாபரனாகிய மருந்து! – மருந்து
2. ஆவுகள் கொட்டிலில் பிறந்த மருந்து
அன்பாக மேய்ப்பர் ஆராதித்த மருந்து
பாவம் போக்க இரத்தஞ் சிந்தின மருந்து
பரிசுத்தரான மெஞ்ஞான மருந்து! – மருந்து
3. தீர்க்க தரிசிகள் உரைத்த மருந்து,
தீவினை யாவையும் தீர்க்கும் மருந்து
மூர்க்கர் கையிலகப்பட்ட மருந்து,
மூவரி லொருவரான மருந்து! – மருந்து
4. பிசாசின் தலையை நசுக்கும் மருந்து!
பூரண விடுதலை தந்த மருந்து
கூசாமல் அற்புதஞ் செய்த மருந்து
குருவாகப் புவியிலுதித்த மருந்து! – மருந்து

Leave a Comment Cancel Reply

Exit mobile version