Meithan Meal Sthalam – மெய்தான் மேல் ஸ்தலம்

1. மெய்தான் மேல் ஸ்தலம் ஒன்றுண்டு
அதன் வீதிகள் பொன்னாம்!
அம் மாட்சிமைகள் அதிகம்
நம் நாவால் சொல்லக் கூடாதாம்
மெய்யாய் மெய்யாய்
எனக்கோர் பங்கு உண்டு
2. மரித்த உன் பெந்துக்கள்
அவ்விடம் இருப்பார்;
உன் மீட்பர் பாதத்தைத் தேடு
அப்போ அவரைப் பார்ப்பாய்
சொல்வேன் சொல்வேன்
நீ அவரைச் சந்திப்பாய்
3. அங்கே பரிசுத்தர் தான்
உட் செல்லக் கூடுமாம்!
பாவிகளாய் ஜீவிப்போர்கள்
ஓர் போதும் போகக் கூடாதாம்;
ஆனால் ஆனால்
இப்போ சுத்தன் ஆவாய் நீ!
4. உன் பாவங்களை மன்னிக்க,
பரன் மானிடன் ஆனார்;
உன் மீறுதல்களை நீக்க
உதிரம் சிந்தினார்;
இப்போ இப்போ
உன் மீட்பர் அண்டை வா

Leave a Comment Cancel Reply

Exit mobile version