Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை
என்றுறை செய்தேனன்றோ
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் உன் அருகில் நான்
என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்
1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
என்ன வந்தாலும் பயமே இல்லை
மாறாத இயேசு உண்டெனக்கு
மனது ஒருபோதும் கலங்கவில்லையே
ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
புயலில் என் கன்மலையே
என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்
2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
நல்வசனத்தின் வல்லமையாய்
வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே
எலியாவின் தேவன் எங்கே என்ற
அற்புதம் நடந்திடுமே
என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

Leave a Comment Cancel Reply

Exit mobile version