Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி

நல்லாயன் யேசு சாமி
ராஜாதாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய்
உயிர் தாறார்
எல்லார்க்கும் பெரியோன்
எம்பிரான் தம்பிரான்
ஏகவஸ்தோரே
எகோவா மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா – நல்லாயன்
மன்னர் மன்னர்
கொண்டாடிய நீடிய
வானப் பரமகு மாரா வோ – அதி
ஞானத் திறம் மிகும்
வீராவோ – நல்லாயன்
விண்ணாடார் முழங்க
மன்னாடர் விளங்க
மேவி வந்தமே சையாவே படு
பாவி சொந்தம்
ஏ சையாவே – நல்லாயன்
சீராட்டுக் காட்டி
எந்தையார் தந்தையார்
திருக்கடைக் கண்ணால்
பார்த்தாரே – வந்து
திரும்பத் திரும்ப எனைச்
சேர்த்தாரே – நல்லாயன்
ஆட்டைக் கூட்டி ஒர்
தொழுவத்தில் அடைப்பார்
அரிய நல்ல மேய்ச்சல்
கொடுப்பார் – அன்
பாகத் தோளினிலே
எடுப்பார் – நல்லாயன்

Leave a Comment Cancel Reply

Exit mobile version