Neer Ennai Kaangindra Dhevan -நீர் என்னைக் காண்கிற தேவன்

நீர் என்னை காண்கின்ற தேவன் தேவன்
நீர் என்னை நடத்துகின்ற தேவன் தேவன் – 2
உமக்கு மறைவாக எங்கே நான் ஓடுவேன்
உமக்கு மறைவாக எங்கே நான் ஒளிவேன் – 2
வானத்தில் ஏறினாலும் அங்கேயும் இருக்கிறீர்
பூமியில் படுத்தாலும் நீர் என்னை சுமக்கிறீர் – 2

1. வனாந்திர பாதையிலே ஆகாரை கண்டீரே
வாழ்க்கையை வெளிப்படுத்தி வாழ வைத்திரே
அவளின் வேதனை வியாகுலத்தை மாற்றினீரே
நீர் என்னை என்னை காண்கின்ற தேவன் என்றாளே

2. சீனாய் வனாந்திரத்தில் மோசேயை கண்டீரே
முட்செடியின் நடுவில் நின்று தேவன் நீர் பேசினீரே
தம்மை வெளிப்படுத்தி திட்டத்தை தந்தீரே
என் ஜனத்தின் வேதனையை கண்டேன் என்றீரே

3. பாவத்தில் உழன்ற என்னை தேடி வந்தீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவி மீட்டீரே
பரலோகத்தை இராஜ்ஜியத்தை வெளிப்படுத்தி தந்தீரே
நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்பேனே

Leave a Comment Cancel Reply

Exit mobile version